Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

பெயர் மாற்றம் செய்ய புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் விண்ணப்பிக்கும் வசதி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்

புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

2023-2024 ஆம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது  செய்தித் துறை அமைச்சரால்,  எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம் சார்பில், சென்னை, மதுரை மற்றும் திருச்சி அரசு கிளை அச்சகங்களில் தற்போது துணை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.

1) மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொது மக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதற்காக, பொது மக்களின் விருப்பத்தின் பேரில் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2) இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலனுக்காக அரசு கிளை அச்சகம், புதுக்கோட்டையில் 26.04.2023 முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

3) பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை  e-Challan  மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் பெறப்படும்.

4) பொது மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்கக  இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top