Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

கோபி மொடச்சூர் நாட்டுக்கல் திடலில் காமராஜர் பிறந்தநாள் விழா

ஈரோடு

கோபியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

அகில இந்திய நாடார் வாழ்வுரிமைச் சங்கம் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக கோபி மொடச்சூர் நாட்டுக்கல் நாடார் திடலில் கர்மவீரர் காமராஜரின் 121 -ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்வில்,அதிமுக அமைப்புச் செயலாளர் ஈரோடு புறநகர் அதிமுக மாவட்ட செயலாளரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் பெருந்தலைவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி அன்னதான நிகழ்ச்சி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சத்தியபாமா, நகர செயலாளர் பிரினியோ கணேஷ், நகர்மன்ற உறுப்பினர் முத்துரமணன், அதிமுக நிர்வாகிகள் குறிஞ்சிநாதன், அருள்ராமசந்திரன் கந்தவேல்முருகன், தூரி குமார்,கமல் நாடார்,மோகன்நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top