Close
செப்டம்பர் 19, 2024 10:58 மணி

அரசின் மலிவு விலை தக்காளி விற்பனை, மின்னணு பரிமாற்றம் மூலம் பரிவர்த்தனை

புதுக்கோட்டை

அரசின் மலிவு விலை தக்காளி விற்பனையை தொடக்கி வைத்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகளில் அரசின் மலிவு விலை தக்காளி விற்பனை மற்றும்மின்னணு பரிமாற்றம் (Paytm) மூலம் பரிவர்த்தனையையும்  மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை நகராட்சியில் கூட்டுறவுத்துறையின் சார்பில், திருக்கோகர்ணம் அர்பன் அங்காடி எண் 17 -ல், தமிழக அரசின் மலிவு விலை தக்காளி விற்பனையினையும் மற்றும் நிஜாம் காலனி அர்பன் அங்காடி எண் 25 -ல், மின்னணு பரிமாற்றம் (Paytm) மூலம் பரிவர்த்தனையினையும்,  ஆட்சியர் மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார்.

பின்னர்  ஆட்சியர்  தெரிவித்ததாவது;

 பொதுமக்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை அரசு  செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், கூட்டுறவுத் துறையின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை நகராட்சி பகுதி நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசின் மலிவு விலை தக்காளி விற்பனையினையும் மற்றும் மின்னணு பரிமாற்றம் (Paytm) மூலம் பரிவர்த்தனையினையும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகர் பகுதியில் முதல் கட்டமாக 10 நியாய விலைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து அங்கிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுவதன் மூலம் வெளிச்சந்தைகளில் விலையேற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.

ஊட்டி டீ தூள் மற்றும் அரசு உப்பு போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை வாங்குவது போல நியாயவிலைக் கடைகளில் தக்காளியை பொதுமக்கள் வாங்கலாம். இதற்கு குடும்ப அட்டையை காண்பிக்க தேவையில்லை. பொதுமக்கள் அருகில் உள்ள தக்காளி விற்பனை செய்யப்படும் எந்த நியாயவிலைக் கடைக்கும் சென்று தக்காளியினை பெற்றுக் கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் தக்காளி விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். இதன்மூலம் தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைவது தடுக்கப்படும். நிஜாம் காலனியில் உள்ள நியாயவிலைக் கடையில் மின்னணு பரிமாற்றம் (Paytm) மூலம் பணம் செலுத்தும் வசதி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
நிஜாம்காலனி நியாவிலைக்கடையில் மின்னணு பரிவர்த்தனை வசதியை திறந்து வைத்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,026 நியாயவிலைக் கடைகள் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 369 நியாயவிலைக் கடைகளில்  Paytm  நிறுவன  UPI மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்தவசதி அறிமுகப்படுத்தப்படும்.

நியாயவிலைக் கடைகளில் Paytm  நிறுவனம் மூலம் UPI வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் இனி குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து பொருட்களுக்குரிய பணத்தை தங்களது கைப்பேசி மூலமாகவே செலுத்தலாம். மேலும் Paytm தவிர்த்து Google Pay, Phone  மற்றும் பிற வங்கி  UPI  மூலமும் அங்காடியில் வைக்கப் பட்டுள்ள QR கோட் -ஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும்.

எனவே இனி நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டை தாரர்கள் பெறும் அனைத்து பொருள்களுக்குரிய பணத்தை எளிமையாக UPI  மூலம் செலுத்திடலாம். இதன்மூலம் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் மூலம் செயல் படுத்தப்படும் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை நல்ல முறையில் பெற்று பயனடைய வேண்டும் என்றார்  ஆட்சியர் மெர்சி ரம்யா.

இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் கோ.இராஜேந்திர பிரசாத், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மத்திய கூட்டுறவு மேலாண் இயக்குநர் தனலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top