Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

கோபி யூனியன் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய செங்கோட்டையன் எம்எல்ஏ

ஈரோடு

கோபி யூனியன் அலுவலகத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற சுதந்திரதின விழா

கோபி யூனியன் அலுவலகத்தில் கோபி சட்டமன்ற உறுப்பினர் கே ஏ செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் 77 -ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது கோபி யூனியன் அலுவலகத்தில் 77 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோபி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான கே. ஏ. செங்கோட்டையன் தேசிய கொடியை ஏற்றி, மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், நகர செயலாளர் பிரிநியோகணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top