Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

திருவொற்றியூர் எல்ஐசி அலுவலகத்தில் 67 ஆம் ஆண்டு விழா

சென்னை

திருவொற்றியூர் எல் ஐ சி கிளையில் 67 ஆம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி நடைபெற்ற மருத்துவ முகாமினை கேபி சங்கர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் . உடன் கிளை மேலாளர் சம்பத் குமார், துணை மேலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர்

சென்னை திருவொற்றியூர் எல்ஐசி அலுவலகத்தில் 67 -ஆம் ஆண்டு விழாவையொட்டி  நடைபெற்ற மருத்துவ முகாமினை கே.பி. சங்கர் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.

எல்ஐசி தனது 67 -ஆவது ஆண்டு தொடக்க நாளை இன்று கொண்டாடுகிறது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள எல்ஐசி அலுவலங்களில் ஒரு வாரத்திற்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

திருவெற்றியூர் எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்ற  விழாவுக்கு, முதுநிலை மேலாளர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.  உதவி மேலாளர் மணிகண்டன் முன்னிலை வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் எம்எல்ஏ  குத்துவிளக் கேற்றி  விழாவை தொடக்கி வைத்தார்.  மேலாளர் சம்பத், கே.பி சங்கர் எம்எல்ஏ  ஆகியோர்  எல்ஐசி சேவைகள் குறித்து வாழ்த்திப் பேசினர்.

எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில்  நடந்த பொது மருத்துவ முகாம் கண் பரிசோதனை முகாம்களை கேபி சங்கர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் வளர்ச்சி அதிகாரிகள் ராமலிங்கம், மனோகரன், சங்க நிர்வாகிகள் நாகராஜன், அன்பழகன், பாஸ்கரன், கேசவன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top