Close
செப்டம்பர் 20, 2024 2:57 காலை

புதுக்கோட்டையில் புதிய சேமிப்புக் கிடங்கு… காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வர்

புதுக்கோட்டை

முதல்வர் திறந்து வைத்த கிட்டங்கியை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கினை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து  தமிழ்நாடு முதலமைச்சர்  வைத்தார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில், புதுக்கோட்டை , திருவப்பூர் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில், ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கினை  முதலமைச்சர் (08.09.2023) திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, திருவப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா பங்கேற்றார்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், அறிவியல் முறையில் சிறந்த கட்டுமானத்தை ஏற்படுத்தி வேளாண் பொருட்களின் தரம் மற்றும் அளவினைப் பாதுகாத்திடும் பொருட்டு விவசாயிகள் மற்றும் விவசாயத்தைச் சார்ந்த வர்த்தக நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் தோற்றுவிக்கப் பட்டது.

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனம் முறையே 50  % பங்கு கொண்ட இரு பங்குதாரர்கள் ஆவர். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் 60 இடங்களில் 269 கிடங்குகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனக் கிடங்குகளில், விவசாயிகள், வியாபாரிகளின் விவசாய விளைபொருட்கள், விதைகள், உரங்கள் சேமித்து வைக்கப்பட்டு அதற்கான ரசீது  (Warehouse Receipt) வழங்கப் படுகிறது. மேலும், அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் சேமிக்கப்படும் பொருட்களையும் இருப்பில் வைத்து செயல்பட்டு வருகிறது.

2021-22 ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக புதுக்கோட்டை வட்டம், திருவப்பூர் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில், ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் (தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்) (திருச்சி)  க.தமிழ்ச்செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், சேமிப்பு கிடங்கு மேலாளர் (புதுக்கோட்டை) ம.பழனியப்பன், வட்டாட்சியர் விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்துகொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top