Close
செப்டம்பர் 20, 2024 12:44 காலை

ரோட்டரி சார்பில் மகளிருக்கான தனித்துவமிக்க ஆளுமை பயிற்சி

புதுக்கோட்டை

சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ராணியார் மகளிர் பள்ளியில் நடைபெற்ற ஆளுமைத்திறன் பயிற்சி

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக செப்டம்பர் மாத அறம் சிறப்பு திட்டம் தனித்திரு என்ற தலைப்பில் பெண்களுக்கான தனித்துவமிக்க ஆளுமை பயிற்சி  புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமுக்கு, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராஜ் நாராயணன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டம் 3000 தின் துணை ஆளுநர் ஜெயக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி வாழ்த்துரை வழங்கினார்கள் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் செனட் உறுப்பினர் காசிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

ஜேசீ மண்டல பயிற்சியாளரும், குழிபிறை ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.அழகப்பன் சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு தலைமை பண்பு பற்றிய பயிற்சி அளித்தார்.

நிகழ்ச்சியை சங்க ஆலோசகர் கண.மோகன்ராஜா, செயலாளர் முத்தன் அரசகுமார், உடனடி மேனாள் தலைவர் சிவக்குமார் திட்ட இயக்குனர்களாக  இருந்து நடத்தினர்.

நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் காந்தி, முதுநிலை புவியியல் ஆசிரியர் தங்கமணி, பொறியாளர் ஓம்ராஜ், முகமது அப்துல்லா, ஆரவமுதன், தயாளன், அன்பழகன், செல்வகுமார்,  யோகேஸ்வரன். அருளானந்தம், நாகரத்தினம்,
சேது கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் 105 பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது .

முன்னதாக  புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அசோகன் வரவேற்றார் நிறைவாக பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top