Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

ஆசிரியர் தின விழாவில் 35 ஆசிரியர்கள் கௌரவிப்பு

புதுக்கோட்டை

பிரஹதாம்பாள் பள்ளியில் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா

ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்  35 ஆசிரியர்கள் கௌரவிக்கப் பட்டனர்.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆசிரியர் தின  கொண்டாட்டம் மற்றும் 35 ஆசிரியர்களை கௌரவிக் கும் விழாவுக்கு சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி, துணை ஆளுநர் ஜெயக்குமார், சங்க செயலாளர் முத்தன் அரசகுமார், கல்விக் குழு தலைவர் இப்ராஹிம் பாபு, நகர்மன்ற உறுப்பினர் ராஜா முஹம்மது, சாலை பாதுகாப்பு விழிப்புணர் சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜா  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் மா.மஞ்சுளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற் றினார்.

நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும்  சங்கத் தலைவர் இனிப்பு வழங்கி  வாழ்த்துகளை தெரிவித்தார்.  முன்னதாக சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்  திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் எஸ்ஏஎஸ். சேட் என்ற அப்துல் ரகுமான், .ஆரவாமுதன் திட்ட இயக்குனர்களாக செயல்பட்டனர்.

முன்னதாக முதுகலை அறிவியல் ஆசிரியர் இளங்கோ வரவேற்றார்.  நிறைவாக சங்க பொருளாளர் சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் பார்த்திபன் மற்றும் உறுப்பினர்கள்  யோகேஸ்வரன், பாரூக் ஜெய்லானி, தங்கராஜா, தயாளன், அன்பழகன், செல்வரத்தினம், பிரபு மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top