Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

தீபாவளி கொண்டாட்டம்: தாமிரபரணி எலக்ட்ரானிக்ஸில் பரிசு கூப்பன் அறிமுகம்..

ஈரோடு

ஈரோடு தாமிரபரணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஷோரூம்

ஈரோடு வீரப்பன்சத்திரம், பாரதி தியேட்டர் சாலையில் அமைந்துள்ள தாமிரபரணி எலக்ட்ரானிக்ஸ் & பர்னிச்சர்ஸ் நிறுவனம் தீபாவளி விற்பனைக்காக பரிசு கூப்பன்களை தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து தாமிரபரணி எலக்ட்ரானிக்ஸ் அன்டு பர்னிச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொன் நாராயணன் கூறியதாவது:

ஈரோடுஎங்கள் நண்பர்கள், வாடிக்கையாளர் களின் மேம்பட்ட ஆதரவும் ஆசியுடனும் ஈரோட்டில் தாமிரபரணி எலக்ட்ரானிக்ஸ் & பர்னிச்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கி 31 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். ஆன்லைன் வர்த்தகம், மாபெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் போட்டிகளைக் கடந்து இந்நிறுவனம் தலைநிமிர்ந்து நிற்க எங்களது வாடிக்கையாளர்களும் நண்பர்களும் தான் முதற்காரணம்.

அவர்களின் இந்த ஆதரவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அருமையான தருணத்தில் எ வாடிக்கையாளர்களும் நண்பர்களும் குறைந்தபட்சம் ரூ.300 -க்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருள்களை வாங்குவோருக்கு அவ்வாறு பொருள் வாங்குபவருக்கு கூப்பன் அளிக்கப்படும்.

இந்த கூப்பனிலுள்ள எண்ணுக்கு முதல் பரிசாக 65 இன்ச் LED டிவி, 2ஆம் பரிசாக டபுள் டோர் ஃபிரிட்ஜ், 3ஆவது பரிசாக 43 இன்ச் LED டிவி உள்பட 200 பேருக்கு பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.201 -ஆவது நபரில் இருந்து மற்ற அனைவருக்கும் நிச்சயப் பரிசு வழங்கப்படும்.

அதுமட்டுமல்ல; இந்த கூப்பனைப் பயன்படுத்தி ரூ.3000 மதிப்பிலான பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 300 முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். இந்த கூப்பனை பயன்படுத்தி எத்தனை முறை பொருட்கள் வாங்கினாலும் ரூ.300 தள்ளுபடி அளிக்கப்படும்.

வாடிக்கையாளர்களையும் நண்பர்களையும் கவருவதற்காக மட்டும் இந்த சலுகையை அறிவிக்கவில்லை.வாடிக்கையாளர் களுக்கும் நண்பர்களுக்கும் இடையிலான எங்களது பந்தத்தை தொடர வேண்டும்; இதன் மூலம் அவர்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த கூப்பன் திட்டத்தை  அறிமுகம் செய்திருக்கிறோம்.

இந்த பரிசு குழுக்களில் வெற்றி பெறுவதற்கும் இந்த கூப்பன் களை வாங்குபவர்களுக்கும் வரும் 10-12-2023 ஆம் தேதி அன்று ஈரோட்டில் நடைபெறும் பிரமாண்டமான விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்றார் பொன் நாராயணன்.

# செய்தி ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top