Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

நார்த்தாமலையைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு மனைப்பட்டா: எம்எல்ஏ வழங்கல் 

புதுக்கோட்டை

நார்த்தாமலையைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு மனைப் பட்டாக்களை  எம்.சின்னதுரை எம்எல்ஏ வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சியைச் சேர்ந்த 18 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் குடியிருக்க சொந்தமாக வீடும், மனைப்பட்டா வும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா கிடைக்க தொடர்ச்சியாக பல்வேறு முயற்சி களை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.சின்னதுரை முயற்சி எடுத்து வருகிறார். இவரது முயற்சியால் பல்வேறு கிராமங் களில் உள்ள ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் நார்த்தாமலையைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

இலவச வீட்டு மனைப்பட்டாக்களை அரசின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வழங்கினார். இந்நிகழ்வில், திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், குன்றாண்டார் கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஆர்.என்.போஸ், மாவட்டக் கவுன்சிலர் செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் மா.நா.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top