Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

செப் 25 ல் கல்விக்கடன் வழங்கும் முகாம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கல்விக்கடன் முகாம்

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை
ஆட்சியர் மெர்சி ரம்யா

டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்  25.09.2023 (திங்கள்கிழமை) அன்று காலை 8. மணி முதல் புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

10 -ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12 -ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பயிற்சி கல்லூரி, நர்சிங் கல்லூரி மற்றும் மாநில, ஒன்றிய அரசின் பதிவு பெற்ற அனைத்து வகையான கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விக்கடன் வழங்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள 10 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12 -ஆம் வகுப்பு சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமானச் சான்றிதழ் நகல், முதல் பட்டதாரி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.

மேலும் மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு முகாம் நடக்கும் இடத்தில் இ-சேவை மையம் மூலம் பதிவு செய்து தரப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top