Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

கோபியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

ஈரோடு

கோபியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா கோபி கே.எம்.எஸ். மண்டபத்தில் நடந்தது .

விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார்.கோபி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்ட அலுவலர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திமுக ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top