Close
ஜூலை 4, 2024 5:07 மணி

குழிபிறை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

புதுக்கோட்டை

துப்புரவு பணியாளருக்கு பரிசளிக்கிறார், குழிபிறை ஊராட்சித்தலைவர் எஸ். அழகப்பன்

குழிபிறை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க  (1/11/2023) புதன்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணைத் தலைவர் பழ நாச்சம்மை  முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை
குழிபிறை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டம்

மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, இணையவழி வீட்டுவரி, சொத்து வரி செலுத்துதல் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

திருமயம் ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக், துணை சுகாதார மைய செவிலியர், அங்கன்வாடி பொறுப்பாளர் மகளிர் சுய உதவிக் குழு பொறுப்பாளர், ரேஷன் கடை பொறுப்பாளர், வார்டு உறுப்பினர்கள், பனையப்பட்டி காவல் துறையினர்  கலந்து கொண்டனர்.

சிறப்பாக செயல்பட்ட தூய்மை காவலர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு பாராட்டி  ஊராட்சித் தலைவரால் பரிசுகள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top