Close
ஜூலை 2, 2024 2:42 மணி

தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 2023-2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்குதல் தொடர்பாக, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் பட்டியல் இனமக்களின் முன்னேற் றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு 2024 ஆம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப் பட்டுள்ளன.

மேலும், இந்த ஆணையில் விருது பெறுபவரைத் தேர்ந்தெ டுக்கும் உயர்மட்டக்குழு மற்றும் விருது வழங்குவதற்கான வரப் பெறும் விண்ணப்பங்களை கணிப்பாய்வு செய்யும் வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

மேற்படி, டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்குவதற்கு விண்ணப்பங்கள் அளிக்க 15.11.2023 கடைசி நாளாகும். எனவே, டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கு வதற்கான விண்ணப்பத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று 15.11.2023 -க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக் கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

அம்பேத்கார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். அம்பேத்காரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது 1998 ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபார் 1,00,000 (ஒரு லட்சம்) பணமுடிப்பும், பொற்கிழியும் வழங்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top