Close
ஜூலை 4, 2024 4:07 மணி

தையல் தொழில் செய்வோருக்கு தாட்கோ மூலம் கடனுதவி

புதுக்கோட்டை

தாட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு கடனுதவி பெற்ற பயனாளிகளி டமிருந்து தையல் பணிகள் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு கடனுதவி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பயனாளிகளிடமிருந்து தையல் பணிகள் செய்வதற்கு தகுதியான பயனாளிக ளிடமிருந்து விண்ணப்பங்கள் தாட்கோ இணையதளம்  www.tahdco.com மூலம் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

தாட்கோ எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், பல்வேறு கடனுதவி வழங்கப் படுகிறது. இத்திட்டத்தில் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு ஏற்கனவே கடனுதவி பெற்றவர்களுக்கு, கடனுதவி வழங்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top