Close
ஜூலை 2, 2024 2:57 மணி

 பார்வையற்றோருடன்  பொங்கல் கொண்டாடிய புதுக்கோட்டை  அறம் லயன்ஸ் சங்கத்தினர் 

புதுக்கோட்டை

புதுகையில் அறம் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பொங்கல் விழா

புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில்  நகர்மன்ற வளாகத்தில்  கண் பார்வையற்றோருடன்  பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை டவுன்ஹால் வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு  அறம் லயன்ஸ் தலைவர் அரவிந்த் தலைமை வகித்தார். செயலாளர்  பிரபு   வரவேற்றார்.

புதுக்கோட்டை கோட்டாட்சியர் முனைவர் முருகேசன்  சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு      பார்வையற்றோர்களுடன் பொங்கல்  விழாவைக்  கொண்டாடி   வேஷ்டி, சேலை உணவுகள் வழங்கினார்.

புதுக்கோட்டை
அறம் லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

நிகழ்வில்,  திமுக நகர செயலாளர் ஆ. செந்தில்   மற்றும் அறம் லயன்ஸ் சங்கத்தின்  நிர்வாகிகள் சேகர், சக்திவேல், பாண்டிவேல்,பக்தவச்சலம்,முத்துக்குமார்,ஜெயசங்கர், பாரி, சத்தியமூர்த்தி, ரமேஷ், டிஜிட்டல்சரவணன், கார்த்திகேயன், முகமது அபுபக்கர், பார்வையற்றோர் நலச்சங்க    நிர்வாகி கள்  ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறம் லயன்ஸ் தலைவர் அரவிந்த் தலைமையில்  செய்தனர். சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top