Close
ஜூலை 7, 2024 10:41 காலை

திருமயம் வேளாண்துறை அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

புதுக்கோட்டை

திருமயம் வேளாண உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

திருமயம் வேளாண்துறை அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் அதிகரிக்கவும் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் கடந்த சில ஆண்டுகளாக சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாட வேண்டுமென அறிவித்தது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் அலுவலகங்களில் பணி புரியும் ஊழியர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடுகின்றனர். அதைப்போல பள்ளி, கல்லூரிகளிலும் சமத்துவம், சகோதரத்துவத்தை வளர்க்கும் விதமாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, திருமயம் வேளாண்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், வேளாண் உதவி இயக்குநர் என். உமா, தோட்டக்கலை உதவி இயக்குநர் தீபாதேவி மற்றும் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top