Close
ஜூலை 7, 2024 10:04 காலை

மாவட்டத்தில் 42 போலீஸ் எஸ்ஐ -கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை

புதுகையில் 41 எஸ்ஐ கள் பணியிட மாற்றம்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிந்து வந்த 41 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட  காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வரும் காவல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 41 காவல் உதவி ஆய்வாளர்களை மாவட்டத்துக்குள் ளேயே வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைவரும் அடுத்த ஓரிரு நாட்களில் இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட காவல் நிலையங்களில் பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top