Close
செப்டம்பர் 20, 2024 1:32 காலை

மறைந்த நிருபர் சண்முகசுந்தரம் படத்திறப்பு: ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கம் அஞ்சலி

ஈரோடு

மறைந்த ஈரோடு காலைக்கதிர் நிருபர் சண்முகசுந்தரத்துக்கு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத் தின் சார்பில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டம்

ஈரோடு காலைக்கதிர் நாளிதழின் செய்தியாளர் சண்முகசுந்தரம் (13.2.2022) மறைவுக்கு  ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில்    இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு பெரியார் மன்றத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு நலச்சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.  செயலாளர் ஜீவாதங்கவேல், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டு, மறைந்த சண்முகசுந்தரத்தின் உருவப்படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் சார்பில் சண்முகசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம், ஈரோடு போட்டோ மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் மற்றும் எபிக் டிரஸ்ட் மூலம் ரூ.1.25 லட்சத்துக்கான  காசோலையும் வழங்கப்பட்டது.

ஈரோடு
இரங்கல் கூட்டத்தில் பேசிய ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் சண்முகம்

முன்னதாக பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் தோழர் சண்முகம், கோவிந்தராஜ், செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், மூத்த பத்திகையாளர் சம்பத், போட்டோ&ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், கார்த்தி, சிவசங்கர், மூர்த்தி, ரவி, குமரவேல் ராஜா, கந்தவேல் மற்றும்பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்,  உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையா ளர்கள், புகைப்படகலைஞர்கள் பலர் கலந்து கொண்டு மறைந்த சண்முகசுந்தரத்தின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி  செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top