Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை பயன்படுத்திய பழைய வாகனங்கள் ஏலம் : எஸ்பி தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை பயன்படுத்திய பழைய வாகனங்கள் ஏலம் விடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 22 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையில் வருகின்ற மார்ச் 3 -ஆம் தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும்.

ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் மார்ச் 2-ஆம் தேதி மாலை 5.மணி வரை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் அன்றே (02.03.2022)  தலா ஒரு இரு சக்கர வாகனததிற்கு ரூ.1000 -ம் ரூபாய மற்றும் 4 சக்கர வாகனத்திற்க்கு ரூபாயரூ.2000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும. பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஏலம எடுத்த உடன் முழு தொகை மற்றும் அதற்குரிய சரக்கு மற்றும சேவை வரியுடன் அன்றே அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top