Close
செப்டம்பர் 19, 2024 11:04 மணி

திருவப்பூர் தேர்த்திருவிழா: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம்-மாருதி கார் கேர் சார்பில் நீர் மோர் பந்தல்

புதுக்கோட்டை

திருவப்பூர் தேரோட்ட விழாவையொட்டி சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு- மாருதி கார்கேர் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை தொடக்கி வைத்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் மாருதி கார் கேர் இணைந்து மாருதி கார் கேர் வளாகத்தில் 11 -ஆம் ஆண்டு நீர் மோர்  பந்தல் அமைத்து பக்தர்கள் பொதுமக்களின் தாகம் தணித்தனர்.

 சங்கத் தலைவரும் மாருதி கார் கேர் உரிமையாளருமான மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர் மோர்பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பானங்களை வழங்கினார். மாவட்ட திமுக  பொருப்பாளர் கே.கே. செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, நகராட்சி சேர்மன் திலகவகிசெந்தில், துணை சேர்மன் லியாகத் அலி, நகராட்சி உறுப்பினர்கள் பால்ராஜ்,  ராஜா முகமது, ரோட்டரி மாவட்ட மேனாள் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் துணைத் தலைவர் .இப்ராஹீம் பாபு வரவேற்றார்.  விழாவில் எஸ்.பார்த்திபன், ஜெ.ஜெயக்குமார், விஎன்எஸ். செந்தில், எம்ஆர்எம். முருகப்பன்,  ஏ.ஆர்..கார்த்திகேயன்,சீனிவாசன், நடராஜன், சேகர், ராஜதுரை, கோவிந்தராஜ், சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர்சுப்பையா, தங்கராஜா, சங்கீதப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top