Close
செப்டம்பர் 20, 2024 1:46 காலை

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை

புதுகை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடந்த மகளிர் தின விழாவில் விருது வழங்கிய மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஆர். சத்யா

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக  உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக முப்பெரும் விழா  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. உலக மகளிர் தின விழா குடும்ப சந்திப்பு விழா பெருமைக்குரிய பெண்களின் பணிகளைப் பாராட்டி விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் துரைமணி   விழாவுக்கு தலைமை வகித்தார்.

புதுக்கோட்டை  மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஆர். சத்யா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

புதுக்கோட்டை நகர் காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் ஆலோசகர்  அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி  ஆகியோர்  வாழ்த்துரையாற்றினர்.

இதில், மருத்துவத்துறை பள்ளி ஆசிரியர்கள்  காவல் துறையைச் சார்ந்த பெருமைக்குரிய பெண்களுக்கு விருது வழங்கி  பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. விருது பெற்ற அனைவரையும் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி  வாழ்த்தினார்.

விழாவில் மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி மண்டல துணை ஆளுநர் ஆர். கருணாகரன் மற்றும் முன்னாள் தலைவர்கள் செயலாளர் பாஸ்கரன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மகளிர், குழந்தைகள்  அணைவருக்கும்    பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக செல்விதுரைமணி  வரவேற்புரையாற்றினார்.  நிறைவாக காயத்ரி பாஸ்கர் நன்றி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top