Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகம் வந்த மகளிருக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தின வாழ்த்துத்தெரிவித்த வாசகர் வட்டத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி.

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தினத்தன்று வருகை தந்து நூல்களை வாசித்த மகளிருக்கு   பொன்னாடை அணிவித்து உலக மகளிர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

காலை முதலே நூலகம் வந்த பெண்களை வரவேற்று வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி பொன்னாடை அணிவித்து பாராட்டி மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மைய நூலக நூலகர் சசிகலா, நூலகர் கண்ணன், மகாத்மா பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், ரோட்டரி துணை ஆளுநர் கருணாகரன், பேலஸ் சிட்டி ரோட்டரி தலைவர் துரைமணி உடனிருந்து வாழ்த்தினர். வாசகர் வட்டம் சார்பில் நூலக அலுவலக பணியாளர்கள் மகளிர் அனைவருக்கும்
பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.வாசகர் வட்டம் நடத்திய இப்பாராட்டு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக வருகை தந்த பெண்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top