Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த யு.டி.ஐ.டி வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிடம் புதிதாக விண்ணப்பம் பெறுவதற்கு மற்றும் யு.டி.ஐ.டி.அட்டை வேண்டி இது நாள்வரையில் விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளி களிடமும் விண்ணப்பங்கள் பெற்று யு.டி.ஐ.டி திட்டத்திற்கான பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் 17.03.2022  நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top