Close
செப்டம்பர் 20, 2024 5:52 காலை

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன்

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத கேட்பாரற்ற நிலையில் இருந்த (Sec. 102 CrPC) 10 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 355 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 366 வாகனங்கள் வருகின்ற 29.03.2022 -ஆம் தேதி காலை 10  மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட  ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 28.03.2022 -ஆம் தேதி மாலை 5  மணி வரை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாசுனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை மூலம் எடுக்க விரும்புவோர்  (28.03.2022 -ஆம் தேதி) அன்றே ரூ.100/- முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஏலம் எடுத்த உடன் முழு தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி  (GST–  இருசக்கர வாகனங்களுக்கு 12%  மற்றும்  நான்கு சக்கர வாகனங்களுக்கு 18%)  முழுவதையும் அரசுக்கு அன்றே  ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top