Close
செப்டம்பர் 19, 2024 7:19 மணி

வாகன ஏலம் விடப்படும் தேதி மாற்றம்: மாவட்ட காவல்துறை அறிவிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் காவல்துறைசார்பில் வாகனங்கள் ஏலம்

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏலம் விடப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத கேட்பாரற்ற நிலையில் இருந்த 10 நான்கு சக்கர வாகனங்கள் , 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 355 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 366 வாகனங்கள் வருகின்ற 29.03.2022 – ஆம் தேதி காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது.

 பொது வேலை நிறுத்தம் காரணமாக ஏலத் தேதி வரும் 29.03.2022 – ஆம் தேதிக்கு பதிலாக  30.03.2020 – ஆம் தேதி (புதன்கிழமை)   காலை 10 மணிக்கு ஏலம் விடப்படும்.

ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 29.03.2022 – ஆம் தேதி மாலை 5  மணி வரை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்.

வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர்  மாவட்ட காவல் அலுவலகத்தில் ரூ.100 /- முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவர்.

ஏலம் எடுத்த உடன் முழு தொகை மற்றும் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST இருசக்கர வாகனங்களுக்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top