Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

புதுக்கோட்டையில் வரும் 5 ஆம் தேதி மின் தடை

  • புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை (கிராமியம்) மின் வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். கண்ணன வெளியிட்ட தகவல் :  வரும் (5.4.2022) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் சிப்காட் நகர், மருதுபாண்டியர், நகர் சிப்காட் தொழிற்பேட்டை, தாவூத் மில், சிட்கோ தொழிற்பேட்டை ( ரங்கம்மாசத்திரம்), கே.கே. நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி. வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர் இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி , செட்டியாபட்டி. ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலகாயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன்நகர், பழனியப்பா நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர் , தைலா நகர், ராம் நகர், நரிமேடு, சமத்துவபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என புதுக்கோட்டை (கிராமியம்) மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top