Close
செப்டம்பர் 20, 2024 3:33 காலை

ஈரோட்டில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கல்

ஈரோடு

ஈரோடு திமுக சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

ஈரோட்டில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

ஈரோடு எல்லப்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் எல்லப்பாளையம் சிவகுமார் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்து கொண்டு, 5 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி, தமிழகத்தில் 33 சதவீத வனப்பரப்பை அதிகரிப்பது  குறித்தும், இயற்கை வளங்களை பாதுகாப்பது, மரங்களை அதிகளவில் வளர்ப்பது குறித்தும்  பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ், 5வது வார்டு கவுன்சிலர் கவுசல்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top