Close
செப்டம்பர் 20, 2024 1:40 காலை

காவலர் போட்டித்தேர்வு: இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்

புதுக்கோட்டை

காவலர்தேர்வு எழுதுபவர்களுக்கு இலவசபயிற்சி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் (08.04.2022) இன்று தொடங்குகிறது.

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வண்ணம் தன்னார்வ பயிலும் வட்டம் என்;ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் தேர்வு  மற்றும் விரைவில் அறிவிக்கப் படவுள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

இப்பணியிடத்திற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 08.04.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்குகிறது.  இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், இதுபோன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது மேலும் இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். மேலும் தொடர்ச்சியான இடைவெளிகளில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.

இப்பணியிடத்திற்கு அதிக அளவில் இளைஞர்கள் விண்ணப்பிக்கவும், மேலும் விண்ணப்பித்த இளைஞர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள தங்களின் விவரத்தினை புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top