Close
செப்டம்பர் 20, 2024 1:31 காலை

அம்பேத்கர் பிறந்தநாள் : புதுகை மாவட்ட ஆட்சியர் தலைமயில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு புதுகை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடந்த சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர்  பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாளையொட்டி (14.4.2022) மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு, தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் சமத்துவ நாள் உறுதிமொழி  ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சமத்துவ நாள் உறுதிமொழி: சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப் பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர் களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வுவை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்.

 சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சம மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்ற உறுதிமொழி வாசகத்தை ஆட்சியர் கவிதா ராமு எடுத்துக்கூற அதனை அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் வாசித்து உறுதி ஏற்றக்கொண்டனர்

இதில்,  மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீராம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் (நீதியியல்) கபிரியேல் சார்லஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top