Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

உலக புத்தக நாள்: மேலப்பட்டி பள்ளிக்கு நூல்கள் வழங்கிய வாசகர் பேரவை

வாசகர் பேரவை

உலக புத்தகநாளையொட்டி மேலப்பட்டி பள்ளி ஆசிரியருக்கு நூல் வழங்கிய வாசகர்பேரவை செயலர் சா. விஸ்வநாதன்

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு  புத்தகம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி  மேலப்பட்டி நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்  மகேஸ்வரனிடம், புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் புத்தகங்களை   வழங்கி உலக புத்தக தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும், புத்தகம் அறிஞர்களின் அனுபவப் புதையல் புத்தகம் ஆயிரமாண்டுகால அறிவுப் பெட்டகம்புத்தகம் நடமாடும் பல்கலை கழகம் காட்டில் வாழ்ந்த மனிதனை -நாகரீகமாய் நாட்டில் வாழச்செய்தது புத்தகம்.

புதியன படைத்திட பாதை அமைத்திடும் புத்தகம்-தலை
விதியினை வென்றிட மதியினை வழங்கிடும் புத்தகம்
தனியனாய் போரிட தைரியம் தந்திடும் புத்தகம் உடலுள நலனை உறுதி செய்திடும் புத்தகம் என்றார் சா. விஸ்வநாதன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top