Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

கண்தானம் செய்தவர் குடும்பத்துக்கு புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு

புதுக்கோட்டை

கண்தானம் செய்தவர் குடும்பத்துக்கு நன்றி தெரிவித்த புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தினர்

புதுக்கோட்டையில் கண்தானம் செய்தவர் குடும்பத்தினருக்கு  செஞ்சுரி லயன்ஸ் சங்கம்  பாராட்டு தெரிவித்தது.
புதுக்கோட்டை மாவட்ட சிறு தொழில் அதிபர்கள் சங்கத்தின் தலைவரும்  புதுக்கோட்டை ரோட்டரி கிளப் செயலாளரும்  மாவட்ட வர்த்தக சங்கத்தின்   இணைச்செயலாளருமான  எஸ். ராஜ்குமார் அவர்களின் தந்தை  கே.ஜெ.  சிவசங்கர்  தனது கண்கள் தானம் செய்தார். தானம் பெறப்பட்ட  அவரது கண்கள்     இரண்டு  பேரின் வாழ்வில் பார்வை ஒளி ஏற்றி வைக்கப்பட்டது.

இதனை அறிந்த  புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்க நிர்வாகிகள்   ஏ.  அரவிந்த் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர்,  சிறு தொழில் அதிபர்கள் சங்கத்தலைவர்  எஸ். ராஜ்குமார் இல்லத்துக்கு   நேரில் சென்று  அந்தக் குடும்பத்தினருக்கு   நன்றி கூறினர். தொடர்ந்து  கண் தானம் செய்ய  வேண்டுமென செஞ்சுரி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

புதுக்கோட்டை ஸ்ரீ கண்ணப்பநாயனார்     கண்தான பிரசார மையத்தின் தலைவர் சி.கோவிந்தராஜன்,  சமூகஆர்வலர்கள் உள்ளிட்டோர் எஸ். ராஜ்குமார் குடும்பத்தினருக்கு  பாராட்டுத் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top