Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

மே 19 -ல் அறந்தாங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம்

புதுக்கோட்டை

முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 19.05.2022 அன்று அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்.

புதுக்கோட்டைஅறந்தாங்கி வருவாய் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட் சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 19.05.2022 அன்று காலை 10.30 மணிக்கு அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அறந்தாங்கி வருவாய் கோட்டத்தைச் சார்ந்த அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top