Close
செப்டம்பர் 19, 2024 11:06 மணி

ஜூன் முதல் வாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு வருகை: ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை

முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு வருவதையொட்டி ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடந் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  ஜுன் முதல் வாரத்தில் வருகை தருவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 தமிழ்நாடு முதலமைச்சர்  புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு வருகை தருவதை யொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமை யில் (23.05.2022) நடைபெற்றது.

பின்னர்  மாவட்ட ஆட்சியர் கூறியதாவது;  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜுன் முதல் வாரத்தில் புதிய திட்டப் பணிக ளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

இந்நிகழ்வினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமைகளை விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைப்பது குறித்தும், அதிகளவிலான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்கும் வகையில் அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

மேலும் முதலமைச்சரின்  வருகையை முன்னிட்டு மேற்கொள் ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், விழா நடைபெறும் இடம் தேர்வு குறித்தும், அரங்குகள் அமைப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

விழா நாளான்று பயனாளிகளை பாதுகாப்பான முறையில் அழைத்து வருவது குறித்தும், விழா நடைபெறும் இடத்திற்கு தடையற்ற மின்சார வசதி ஏற்படுத்துதல், குடிநீர் வசதி மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல் குறித்தும் அலுவலர் களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

எனவே அனைத்து துறை அலுவலர்களும் முதலமைச்சர்  கலந்துகொள்ளும் விழாவினை சிறப்பாக நடத்திட ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும் என்றார்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆர்.ரம்யாதேவி (காவேரி-வைகை-குண்டாறு), பெ.வே.சரவணன் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top