Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றம்

சென்னை

திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. சங்கர்.

சென்னை திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகம் விம்கோ நகரில் உள்ள புதிய கட்டடத்திற்கு  வியாழக்கிழமை இடமாற்றம் செய்து திங்கள்கிழமை முதல் செயல்பட தொடங்கியது.
வடசென்னை பதிவு மாவட்டத்திற்கு உட்பட்ட செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1965- ஆம் ஆண்டு முதல் திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

முதலில் ராதாகிருஷ்ணன் நகரில் தொடங்கப்பட்ட இந்த அலுவலகம் பின்னர் வடக்கு மாடவீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.  பின்னர் 1992 -ஆம் ஆண்டு முதல் காலடிப்பேட்டை மார்க்கெட் தெருவில் உள்ள தனியார் கட்டடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

இக்கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும், அலுவலகம் அமைந்துள்ள இடம் முதல் மாடி என்பதால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்ததையடுத்து சார்பதிவாளர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய பத்திரப்பதிவு துறை முடிவு செய்திருந்தது.

அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டுவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே காலி இடம் தேடி வந்த நிலையில் இடத்தைத் தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது.    ஆனால் பழுதடைந்த கட்டடத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு விம்கோ நகர் மீன் மார்க்கெட் அருகே உள்ள தனியார் கட்டடத்தில் புதிய அலுவலகம் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

இதனை  திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் திறந்து வைத்தார்.  இதில் சார் பதிவாளர்,  பத்திர எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top