Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

புதுக்கோட்டையில் ஓயாத அலைகள் அறக்கட்டளை இரண்டாவது ஆண்டு துவக்கவிழா

புதுக்கோட்டை

புதுகையில் நடந்த ஓயாத அலைகள் விழாவிவ் பாராட்டப்பட்ட விளையாட்டு வீரர் அனுராதா

புதுக்கோட்டை அருண்மொழியின் ஓயாத அலைகள் அறக்கட்டளை இரண்டாவது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கண்தானம் செய்தும் புதுக்கோட்டையில் தலைசிறந்த சமூகஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கியும் , 50 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி.மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

நகர்மன்றத்தலைவர் திலகவதி செந்தில் , டாக்டர் ராம்தாஸ், ஏவிசிசி. ஆர். கணேசன்,  இந்தியாவின் தங்கமங்கை அனுராதா, தொழிலதிபர் எஸ்விஎஸ். ஜெயக்குமார் , சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்.

புதுக்கோட்டை

நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரைபாலு, முத்துப் பிள்ளைகேண்டின்கர்ணன், புதுநகர் குமார், கல்யாணி கவரிங் ஆறுமுகம், சிங்கப்பூர் தொழிலதிபர் ஜாகிர, நகர் மன்ற உறுப்பினர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, மரம் ராஜா மற்றும் அனைத்து சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். அருண்மொழியின் ஓயாத அலைகள் அறக்கட்டளை நண்பர், உடற்கல்வியாசிரியர் முத்துராமலிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top