Close
செப்டம்பர் 20, 2024 4:15 காலை

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கடன் திட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில். தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23 -ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
1) பிற்படுத்தப்பட்டோர்.மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்,
2) ஆண்டுவருமானம் ரூ 3 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்,
3) விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்திஅடைந்தவராகவும். 60 வயதுக்குமேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்,
4) ஒருகுடும்பத்தில் ஒருநபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்,
5) பொதுக் காலக்கடன் திட்டம்-தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ஒருபயனாளிக்கு  ரூ. 15  இலட்சம் வரை கடனுதவி  வழங்கப்படுகிறது.  ஆண்டு வட்டிவிகிதம் 6 % முதல் 8%  வரை,
6) பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2  இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.  ஆண்டு வட்டிவிகிதம் 5%.
7) சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1 இலட்சம் வரையும்.குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15  இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது.  ஆண்டு வட்டி விகிதம் 4 %. மகளிர் சுயஉதவிக் குழுதொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்கவேண்டும்,திட்டஅலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்கவேண்டும், ஒருகுழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

8) சிறுகடன் வழங்கும் திட்டத்தின்கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ. 1 இலட்சம் வரையும் ஒருகுழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை 15 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது, ஆண்டு வட்டி விகிதம் 5% .ஒருகுழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்,
9) ஒருபயனாளிக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 60.000- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6%.
10) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்,
11) பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்   தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top