Close
செப்டம்பர் 20, 2024 3:32 காலை

பொன்னமராவதி பேருராட்சியில் பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கபசூரண கசாயம் விநியோகம்

புதுக்கோட்டை

பொன்னமராவதி பேரூராட்சியில் கபசூர குடிநீர் வழங்குகிறார், 12 -வது வார்டு உறுப்பினர் ராஜா

பொன்னமராவதி பேருராட்சி பகுதியில் பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கபசூரண கசாயம் வழங்கப்பட்டது..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருராட்சி சார்பில் 12 -ஆவது வார்டு பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் உத்தரவின்படி செயல் அலுவலர் மு.செ.கணேசன் ஆலோசனையின்படி, பனிரெண்டாவது வார்டு பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று, டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அப்பகுதியிலுள்ள பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12 -ஆவது வார்டு உறுப்பினர் ராஜா,  கபசூரண  கசாயத்தை விநியோகித்தார். இதில் பேரூராட்சியின் டெங்கு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top