Close
செப்டம்பர் 20, 2024 1:24 காலை

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம்: 361 பேர் கோரிக்கை மனு அளிப்பு

புதுக்கோட்டை

மக்கள் குறைகேட்பு முகாமில் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி அளித்த மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  (20.06.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 361 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் , இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9,050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் 6 மாற்றுத்திறனாளி களுக்கும், ரூ.8,000 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கும் என ஆகமொத்தம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.62,300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top