Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம்:மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்   நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 294 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு கற்றல் மற்றும் பேச்சு பயிற்சி வழங்கிட தலா ரூ.24,250 மதிப்பீட்டில் ஆவாஸ் செயலியுடன் கூடிய கையடக்க கணினிகளும், மேலும் 6 மாற்றுத்திறனாளி களுக்கு தலா ரூ.1,350 மதிப்பீட்டில் பிரெய்லி கை கடிகாரமும் என ஆகமொத்தம் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,29,350 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top