Close
செப்டம்பர் 20, 2024 7:29 காலை

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில்  வெற்றி பெற்ற அரசு பள்ளிமாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டு

புதுக்கோட்டை

எம்எம்எஸ் தேர்வில் வென்ற மேலப்பட்டி பள்ளி மாணவர்களை வாழ்த்திய வட்டார கல்வி அலுவலர்கள் செங்குட்டுவன், பிரியா குணசேகரன் ஆகியோர்

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில்  வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை  மாவட்ட அளவில்    தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில்    அரசு பள்ளிகளில்    முதலிடம் பெற்ற மேலப்பட்டி   ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர் .

நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள் செங்குட்டுவன், பிரியா குணசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ரித்திகாஸ்ரீ, மாதேஸ்வரி ,சத்யா, ரித்திகா,பிரதாப், உதயநிதி, கேசவன், யக்தீஷ் உள்பட  8 மாணவர்களுக்கு விருதுகள் நற்சான்று வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை

பள்ளியின் தலைமையாசிரியை சீத்தாலெட்சுமி, ஆசிரியர்கள் மகேஸ்வரன் , சரவணன், கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அண்ணாத்துரை, புவனேஸ்வரி, அன்புச்செல்வி, மேகலா, பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியில் பள்ளியின் சார்பாக பெற்றோர்கள்,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

புதுக்கோட்டை

இப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மகேஸ்வரன் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு கையேடு தயாரிப்பில் வல்லுனர் குழுவின்  உறுப்பினராக இருந்து எழுதிய இப்புத்தகத்தை வட்டார கல்வி அலுவலர்செங்குட்டுவன் வட்டார கல்வி அலுவலர்,பிரியா குணசேகரன்    ஆகியோரிடம் வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top