Close
செப்டம்பர் 20, 2024 5:39 காலை

ஜூலை 9 ல்புதுக்கோட்டை மாவட்டத்தில்  நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம்

புதுக்கோட்டை

ஜூலை 9 -ல் நியாயவிலைக்கடை தொடர்பான குறை தீர் முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் 09.07.2022(சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், ஜுலை 2022 இரண்டாவது வாரத்தில் சனிக்கிழமை 09.07.2022 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1  மணி வரை குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்; நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை ஃ நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம்.

பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்;கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 -இன் படி மேற்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top