Close
செப்டம்பர் 20, 2024 1:40 காலை

புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க நிர்வாகக்குழு கூட்டம்

புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்துக்கு (2022-2025) புதிய  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக நிர்வாக குழு கூட்டம் தலைவர் கண.மோகன் ராஜா தலைமையில் மாருதி கார் கேர் வளாகத்தில் நடைபெற்றது.

நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தலைவராக கண.மோகன் ராஜாவும், துணைத் தலைவர்களாக ஆர்.ஆரோக்கியசாமி, எஸ்ஏஎஸ்.சேட் என்ற அப்துல் ரகுமான், செயலாளராக ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு, இணைச் செயலாளர்களாக ஏஆர்..முஹம்மது அப்துல்லா, ஆர். சிவக்குமார், பொருளாளராக சி.பிரசாத், சட்ட ஆலோசகராக வழக்கறிஞர் ஏ.சந்திரசேகர்.

அரசு தொடர்பு பிரிவு செயலராக ஜெ.ராஜா முகமது, திட்டக்குழு செயலராக கேஎல்கேஎஸ். ராஜா முஹம்மது, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு செயலராக புதுகை புதல்வன், தகவல் தொடர்பு  குழு செயலராக பி.கண்ணன், பத்திரிகை தொடர்பு செயலராக பாரூக் ஜெய்லானி, உறுப்பினர் வளர்ச்சி குழு செயலராக கே. முத்துராமலிங்கம் ஆகியோர்.

செயற்குழு உறுப்பினர்களாக விஆர்எம். தங்கராஜா, ஏ.சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர்களாக முகமது மன்சூர், ஜெ.ஜெயக்குமார்,ஓம்ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். புதிய நிர்வாகிகள் மூன்று ஆண்டுகளுக்கு பணியாற்றவுள்ளனர். முன்னதாக  சங்கச் செயலாளர் ஆர்.ஆரோக்கியசாமி வரவேற்றார்.  நிறைவாக செயலாளர் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top