Close
செப்டம்பர் 20, 2024 5:30 காலை

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்குள்பட்ட வல்லம் அய்யனார் கோவில் திட்டப்பகுதியில் 384(G+3) அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். மேலுமஇ; சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்பத்தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டைஇஉணவுப் பங்கீடு அட்டை மற்றும் வங்கிக்கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தஞ்சாவூர் மாவட்டம், வல்லம், அய்யனார் கோவில் திட்டப் பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை, அலுவலக வேலை நாட்களில் 28.07.2202 முதல் 06.08.2022 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அணுகி பயன்பெறலாம்.

தகுதியான பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளன. ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும்;. மேலும் விவரங்களுக்கு 8667350694, 8667756031 மற்றும்  8523962235 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top