Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

ஈரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஈரோடு

ஈரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த உலகத்தாய்ப்பால் வாரவிழா

ஈரோடு   பிபி. அக்ரஹாரம் ராஜாஜிபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  உலக தாய்பால் வார விழா நடைபெற்றது.

ஈரோடு  ஏகம் அறக்கட்டளை மற்றும் திண்டல் ரோட்டரி சங்கம்  சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு  ஏற்படுத்தப் பட்டது.

மருத்துவர்கள்  வினோத்,  விஜயலட்சுமி மற்றும் ஏகம் அறக்கட்டளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ராஜ், ஊட்டச்சத்து பெட்டகங்கள அன்பளிப்பு வழங்கிய திண்டல் ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த  கார்த்தி, வஜ்ரவேல்,  சங்கீதா மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கர்ப்பிணி தாய்மார்களுக்கு  பின் ஊட்டச்சத்து பெட்டகங்கள்  மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top