Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

ஈரோட்டில் அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி

ஈரோடு

ஈரோடு அஞ்சல்துறை சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி

ஈரோட்டில் அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

75 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோட்டில்  அஞ்சல் துறை  சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில்   500 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.
75 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டையும் தேச ஒற்றுமை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறன.

இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் தபால் துறையின் சார்பில்   காந்திஜி சாலையில் தொடங்கிய  விழிப்புணர்வு பேரணி, அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் தபால் துறையை ஊழியர்கள் மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேசிய கொடியை கைகளில் ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top