Close
செப்டம்பர் 19, 2024 11:03 மணி

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா:101 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சுதந்திரதினவிழாவில் நற்சான்றிதழ் பெற்ற அரசு அலுவலர்கள்

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில்   (15.08.2022) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர்,  காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, 20 சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசு தாரர்களுக்கு

பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். சமாதானத்தை குறிக்கும் வகையில் சமாதான வெள்ளைப் புறாக்களையும், தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார்.

இவ்விழாவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், வேளாண் – உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ.27,39,026 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார்.

புதுக்கோட்டை
சுதந்திர தின தேசிய கொடியேற்றி மரியாதை செய்தமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

மேலும் வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 609 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் துணிப் பைகளை மாவட்ட ஆட்சியர். வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து 10 பள்ளிகளைச் சேர்ந்த 901 மாணவ, மாணவிகளின், எனது இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், தேசப்பற்று, பிரபஞ்ச பாதுகாப்பு, சுதந்திர இந்தியா, வீரிய வாசகம் வந்தே மாதரம், பிரமிட் ஆகிய பல்வேறு மையக் கருத்துகளை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே,  மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top