Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

புதுக்கோட்டை  அலுவலர்  மன்றத்தில் கல்லூரி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தால் நடத்தப்பட்ட விநாடி வினா போட்டிகளில் பரிசு வென்ற மாணவர்களுடன் எம்.பி. அப்பதுல்லா. உடன் அலுவலர் மன்ற நிர்வாகிகள்

புதுக்கோட்டை  அலுவலர்  மன்றத்தில்   மாவட்ட அளவிலான  கல்லூரிகளுக்கிடையிலான  விநாடி வினா போட்டி   நடைபெற்றது.
புதுக்கோட்டை  அலுவலர்  மன்றத்தில்   மாவட்ட அளவிலான  கல்லூரிகளுக்கிடையிலான  விநாடி வினாபோட்டிகள்  நடைபெற்றது.  போட்டியை  மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.  அப்துல்லா  மற்றும்  புதுக்கோட்டை  நகராட்சி தலைவர்   திலகவதி செந்தில்  ஆகியோர்   தொடக்கி வைத்தனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

முதலிடம்பிடித்த  புதுக்கோட்டை அரசு  மருத்துவக் கல்லூரி மாணவர்கள்  ஜாஸ்மின் ரஹ்மான்  மற்றும் யோகராஜா  ஆகியோருக்கு ரூ.2000 -மும்,
இரண்டாமிடம் பிடித்த புதுக்கோட்டை  கலைஞர்  கருணாநிதி அரசு கலைக்கல்லூரி  மாணவி எஸ்.வர்ஷா  மற்றும்  எம். ஷாலினி ஆகியோருக்கு ரூ.1500 -மும்,
மூன்றாமிடம் பிடித்த  திருச்சிராப்பள்ளி  ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவி ஆர்.மதுமிதா  மற்றும்  டி.கவிதா ஆகியோருக்கு  ரூ.1000 மும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது,     வெற்றி பெற்றவர்களுக்கு  நகர செயலாளர்  ஆ.செந்தில் பரிசு மற்றும்  நற்சான்றிதழ்  வழங்கி  வாழ்த்தினார்.

விநாடி வினா    போட்டியின் நடுவராக  மாமன்னர்  கல்லூரி பேராசிரியர்  முனைவர்  கணேசன் இருந்து வெற்றியாளர் களைத் தேர்வு செய்தார்.

 முன்னதாக  அலுவலர் மன்ற   வளாகத்தில்   மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.  அப்துல்லா தேசியக்கொடியை  ஏற்றி  வைத்து சுதந்திர தின  வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஏற்பாடுகளை    அலுவலர் மன்ற பொறுப்பாளர்கள்  பொறியாளர்கள்  அம்பிகாபதி , முத்துக்கருப்பன், சுப்ரமணியன், ராதா கிருஷ்ணன்   செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top