Close
செப்டம்பர் 20, 2024 5:28 காலை

சிறுதானிய உணவுத்திருவிழா கொண்டாடிய புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள்…!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் சிறுவர்கள் கொண்டாடியசிறுதானியஉணவுக் கண்காட்சி

சிறுவர்கள் கொண்டாடிய சிறுதானிய உணவுக் கண்காட்சி
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்துஉணவுத் திருவிழா கொண்டாடினர்.

இந்தநிகழ்வினைபள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தொடக்கி வைத்தார். உணவுத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான உணவுப் பதார்த்தங்களை வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்திருந்தனர். சின்னஞ்சிறு குழந்தைகள் உண்ணவேண்டிய ஆரோக்கியமான உணவுகள் குறிப்பாக சிறுதானிய உணவுகள், தவிர்க்கவேண்டிய எண்ணெய் மற்றும் துரிதஉணவுகள்,நொறுக்குத் தீனிகள் பற்றியநாடகம் மூலம் விழிப்புணர்வை  ஏற்படுத்தினர்.

புதுக்கோட்டை
உணவுத்திருவிழாவில் பங்கேற்ற சிறார்கள்

உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை ஒரு அறையிலும் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களை ஒரு அறையிலும் தனித்தனியே காட்சிப் படுத்தியிருந்தனர். பார்வையிட்ட பெற்றோர்களிடம் தாங்கள் கொண்டு வந்து காட்சிப் படுத்தியிருந்த உணவுப் பதார்த்தங்களின் பெயர்களையும் அவற்றை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளையும், உண்ணக்கூடாத பதார்த்தங்களின் பெயர்களையும் அவற்றைச் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் தீமைகளையும் சிறப்பாகஎடுத்துக்கூறிய குழந்தைகளை பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

மழலை மாணவர்களின் உணவுக் கண்காட்சியைபள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல்,பள்ளியின் மனநலஆலோசகர் மார்ட்டின், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களும் கண்டுகளித்து உண்டு மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை முதல் மற்றும் இரண்டாம் வகுப்புஆசிரியைகள் சிவதர்சினி, சுசிலா, உமாராணி,  ராஜகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top