Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

ஈரோடு மாவட்டம் பவானி சுற்று வட்டார பகுதியில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஈரோடு பவானி

அந்தியூர் செல்லும் சாலையில் வெள்ளம் போல் செல்லும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக தொட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட நேரிட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இதனால் தொட்டிபாளையம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம், பணங்காட்டு வீதி, தாளபையனூர், பழைய காலனி ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள 60 -க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.

ஈரோடு பவானி
 கனமழையால் தொட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் உள்பட 40 க்கும் மேற்பட்ட  வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது

இதனால் மக்கள் நள்ளிரவு முதல் சிரமப்பட்டு  வருகின்றனர். தொடர்ந்து நெல்,கரும்பு,சோளம் ஆகிய விவசாய விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால், நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மழைநீர் பவானி முதல் அந்தியூர் செல்லும் சாலையில் வெள்ளம் போல் செல்லும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை உணராமல் சென்ற வாகன ஓட்டிகள் மழைநீரில் சிக்கி கொண்டது.

இதன் பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கார் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி வட்டாட்சியர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிராம மக்களை பள்ளியில் தங்க வைக்க வருவாய் துறையினர் அழைத்த போது,  அதை கிராம மக்கள் மறுத்ததுடன் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

பல வருடங்களாக மழை காலங்களில் இது போன்ற பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் மழைநீர் செல்ல முறையாக வடிகால் வசதியும் மற்றும் சாலையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மழைநீர் செல்ல வடிகால்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top